நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் தை தேர் திருவிழா - தமிழக, கேரள பக்தர்கள் திரண்டு தேர் இழுத்து வழிபட்டனர்
Jan 18 2022 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் தை தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகர்கோவில் நாகராஜா கோவில் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்றான தை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தை தேர் திருவிழா இன்று நடைபெற்றது. தமிழக அமைச்சர் திரு. மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ காந்தி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து தேர் வடம் பிடித்து இழுத்தனர். இவ்விழாவினை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10-ம் நாள் திருவிழாவான நாளை மாலை சாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.