மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்ற தெப்பத்திருவிழா - பொற்றாமரைக்குளத்தில் மீனாட்சியம்மனும், சொக்கநாதரும் வலம் வந்தனர்
Jan 18 2022 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தைப்பூசத்தையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், தெப்பத்திருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா, கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் மீனாட்சியம்மனும், சொக்கநாதரும் ஊர்வலமாக வந்து, தெப்பக்குளத்தை சுற்றி வருவார்கள். இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, தைப்பூசத்தையொட்டி இன்று வழிபாட்டுத்தளங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், தெப்பத்திருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக்குளத்திலேயே, மீனாட்சியம்மனும், சொக்கநாதரும் வலம் வந்தனர்.