தைப்பூசத்தை முன்னிட்டு செட்டிப்பட்டு முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு - பல்வேறு வகையான நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் தரிசனம்
Jan 18 2022 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தைப்பூசத்தை முன்னிட்டு புதுச்சேரி அருகே உள்ள செட்டிப்பட்டு முருகன் கோவிலில் நடைபெற்ற காவடி எடுத்தல், செடல் போடுதல், மற்றும் மிளகாய் அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் செட்டிப்பட்டு கிராமத்தில் பாலசுப்பிரமணியர் கோயிலில் தைப்பூசப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் உடல் மீது உரலை வைத்து அதில் மிளகாய், மஞ்சள் உள்ளிட்டவற்றை இடித்து அதனை கொண்டு அங்கிருக்கும் சுவாமிக்கு மிளகாய் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.