திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் வைபவம் : கொரோனா பரவலால் பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது
Jan 19 2022 9:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீ்ரங்கம் ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் வைபவம் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் தைமாதத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து, தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு தைமாத சீர் வழங்கும் வைபவம் நடைபெறுவது வழக்கம். வழக்கமாக கொள்ளிடம் வட காவிரியில் சமயபுரம் மாரியம்மன் எழுந்தருளும் நிகழ்வு கட்டுப்பாடுகள் காரணமாக திருக்கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து பின்னர் கண்ணாடி அறையில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து அம்மனுக்கு பட்டுபுடவைகள், மஞ்சள், குங்குமம், வளையல், பூ, பழங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் உள்ளடக்கிய சீர் ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் தலைமை பட்டாச்சாரியார் சுந்தர் தலைமையிலான குழுவினரால் ஸ்ரீரங்கத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சமயபுரம் கோவில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் நிர்வாகத்தினரிடத்தில் வழங்கப்பட்டன. பின்னர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் சார்பில் வழங்கப்பட்ட சீர் வரிசைகளை அணிந்து சமயபுரம் மாரியம்மன் காட்சியளித்தார். ஆண்டு தோறும் வெகுவிமர்சையாக நடைபெறும் இந்நிகழ்வு, கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.