காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் பகுதியில் உள்ள அருள்மிகு வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய திருக்கோயிலில், சுவாமிக்கு வெள்ளிக் கவசம் வழங்கி, அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, வழிபாடு நடத்தினார்.
அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் சின்னம்மா, காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் பகுதியில், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் கோயிலில் வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக, இன்று காலை, சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டார். மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில், ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் திரு. ஜீவானந்தம் தலைமையில், கழகத் தொண்டர்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே சின்னம்மா வருகை தந்தபோது, அ.இ.அ.தி.மு.க முன்னாள் நகர கழக செயலாளர் திரு.பூவை கந்தன் தலைமையில், மேள தாளங்கள் முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மொளச்சூர் பகுதியில் உள்ள அருள்மிகு வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய திருக்கோயிலுக்கு வருகை தந்த சின்னம்மாவுக்கு, கழக நிர்வாகிகள் திரு. மொளச்சூர் பெருமாள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, கோயில் நிர்வாகம் சார்பில், சின்னம்மாவுக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், சுவாமிக்கு அணிவிப்பதற்காக சின்னம்மா வழங்கிய வெள்ளிக் கவசம் மற்றும் வேலுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. வெள்ளிக் கவசம், வேல் ஆகியவற்றை சின்னம்மா, தனது திருக்கரங்களால் கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார். பின்னர் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. சின்னம்மா சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
அருள்மிகு வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய திருக்கோயில் அருகே, ஏழை - எளிய மக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர், நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்டு, சின்னம்மாவுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தனர்.