சென்னை வடபழனி முருகன் கோவிலில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக நிகழ்ச்சி - நேரில் தரிசிக்க அனுமதிக்குமாறு அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை

Jan 19 2022 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

வருகிற 23 ம் தேதி நடைபெற உள்ள வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேக தரிசனத்தை காண தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரானா பரவலைக் கட்டுப்படுத்த கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொங்கல் பண்டிகை அன்றும் முருகனுக்கு மிகவும் உகந்த நாளான தைப்பூச நாளில் முருகன் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த பக்‍தர்கள் இன்று வடபழனி முருகன் கோவிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் நேற்றைய தினம் செலுத்த வேண்டிய முடி காணிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளதாகவும், தைப்பூச நாளில் முருகனை தரிசிக்க முடியாதது வருத்தம் அளிப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

வரும் 23ம் தேதி நடைபெறும் கும்பாபிசேக விழாவிற்கு வரும் பக்தர்களை காவல்துறை பாதுகாப்போடு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, நாளை காலை முதல் கும்பாபிஷேகத்திற்கான யாகம் தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00