திருவண்ணாமலை: தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி - சிறப்பு அபிஷேக ஆராதனை
Jan 19 2022 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஈசான்ய குளக்கரையில் சூலத்திற்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மூன்று முறை ஈசான்ய குளத்தில், சூலத்தை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக, குறைந்த அளவிலான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.