சென்னை மயிலாப்பூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற கபாலீஸ்வரர் கோயில் தைப்பூசத் தெப்பத்திருவிழா
Jan 20 2022 8:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூச தெப்பத்திருவிழா 3 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா, கடந்த திங்கட்கிழமை மாலை தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு இந்நிகழ்ச்சியில் அனுமதி அளிக்கப்படவில்லை. தெப்பத்திற்கு பூக்களைக் கொண்டும், மின்விளக்குகளாலும் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டது. மங்கள வாத்தியம் இசைக்க, தேவாரம், வேதபாராயணத்தோடு தெப்பக்குளத்தில் வலம் வந்தது. பாதுகாப்புக்காக ரப்பர் படகுகளில் தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டனர். முதல் நாளில் தெப்பம் 5 சுற்றுகளும், 2-ம் நாளில் 7 சுற்றுகளும், 3-ம் நாளில் 9 சுற்றுகளும் தெப்பம் வலம் வந்தது.