கும்பகோணம்: ஜலசந்திர மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Jan 20 2022 2:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணத்தில் பழமைவாய்ந்த ஜலசந்திர மாரியம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் திருப்பணிகள், பக்தர்களின் காணிக்கைக் கொண்டு நிறைவு பெற்று, 13 ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காவிரியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் யாகசாலையில் வைக்கப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், இரண்டு நாட்களாக யாக பூஜைகளை நடத்தி வந்தனர். யாகசாலையில் இருந்து புனித நீர் கொண்டு செல்லப்பட்டு, ராஜகோபுரம், மூலவர் கோபுரங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.