மயிலாடுதுறை: சட்டைநாதர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்க பாலாலயம்
Jan 20 2022 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சட்டைநாதர் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்க திட்டமிட்டு பாலாலயம் நடைபெற்றது, இதனை முன்னிட்டு கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தருமையாதீனம் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பாலாயத்தில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறை படி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.