குற்றாலம் குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் தெப்ப உற்சவம்
Jan 21 2022 10:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதனை யொட்டி, சித்திர சபையில் குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள், இலஞ்சி முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் மேளதாளங்கள் முழங்க சித்திரசபைக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சித்திர சபைக்கு எதிரில் உள்ள தெப்பத்தில் சுவாமி, அம்பாள், இலஞ்சி குமரன், வள்ளி, தெய்வானை எழுந்தருளி நீராழி மண்டபத்தை 11 முறை சுற்றி வலம் வரும் வைபவம் நடைபெற்றது.