நாகை: வார இறுதியில் வழிபாட்டுத்தலங்கள் மூடல் - வெளியே நின்றபடி வழிபாடு
Jan 21 2022 6:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் வார இறுதி நாட்களில் மூடப்பட்டுள்ள நிலையில், நாகையில் புகழ்பெற்ற தலங்களில், கோயில் வெளியே நின்றபடி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து நாகை வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், கோயில்களில் தரிசனம் செய்ய முடியாமல், வெளியே நின்றபடி வழிபட்டுச் சென்றனர்.