காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற தேவராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசித் திருவிழா : கருட சேவை உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
May 15 2022 4:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற தேவராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான கருட சேவை உற்சவம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் நடைபெற்றன. பெருமாள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தேவராஜ சுவாமி திருக்கோயிலில் திருத்தேரோட்ட நிகழ்ச்சி வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.