தமிழகத்தை சேர்ந்த தேவசகாயத்திற்கு வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது - ஆரல்வாய்மொழி அருகே உள்ள தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
May 15 2022 6:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டத்தை வழங்கினார். இதனை முன்னிட்டு இத்தாலியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
கன்னியாகுமரியை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. விழாவில் போப் பிரான்சிஸ் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டத்தை வழங்கினார். அவருடன் சேர்த்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியாவின் திருமணமான பொதுநிலையினரில் முதல் புனிதர் என்ற பெருமையும் மறைசாட்சி தேவசகாயம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.