வேலூரில் கோவிலுக்குள் செருப்புடன் வந்த திமுக தொண்டர்கள் - பக்தர்கள் அதிருப்தி
May 16 2022 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் செல்லியம்மன் கோயிலில் நடைபெற்ற, இந்து சமய அறநிலைய துறை மாவட்ட அறங்காவலர் குழு பதவியேற்பு விழாவில், திமுக தொண்டர்கள், காலணி அணிந்தபடி பங்கேற்றது, பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.
வேலூர் செல்லியம்மன் கோயிலில், இந்து சமய அறநிலைய துறை மாவட்ட அறங்காவலர் குழு பதவியேற்பு விழா, மாவட்ட ஆட்சியர் திரு. குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக நீர்வள துறை அமைச்சர் திரு. துரைமுருகன், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் திரு. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அறங்காவலர் குழு தலைவராக அசோகன், உறுப்பினர்களாக அருணாச்சலம், தேவி, சுகுமார் மகேந்திரன் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். கோயிலுக்குள் நடைபெற்ற இந்த விழாவில், திமுகவை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், காலணி அணிந்தபடி கலந்து கொண்டது, பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படாதது வருத்தமளிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் துரைமுருகன், கோயிலுக்குள் காலணி அணிந்தபடி திமுகவினர் வந்ததை ஏன் கண்டிக்கவில்லை என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.