காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் : சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த வரதராஜப் பெருமாள்
May 16 2022 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி, சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான இன்று காலை, கோயிலில் உள்ள வாகன அலங்கார மண்டபம் மல்லி, ரோஜா உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜப் பெருமாள், சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜப் பெருமாள், ரங்கசாமி குளம், கீரை மண்டபம், மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம் மற்றும் நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.