புதுக்கோட்டை சுந்தர சோழபுரம் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டி : புரட்சித்தாய் சின்னம்மா, டிடிவி தினகரன் காளைகள் வீரர்களுக்கு நீண்ட நேரம் போக்கு காட்டியதால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி
May 17 2022 7:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் சுந்தரசோழபுரம் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 400-க்கும் மேற்பட்ட காளைகள் களம் இறக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சுந்தரசோழபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ள கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகைபுரிந்த 400-க்கும் மேற்பட்ட காளைகள் களம் இறக்கப்பட்டன. 150க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்கினர். வெற்றி பெற்றவர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், புரட்சித்தாய் சின்னம்மாவின் காளையும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் காளையும், களத்தில் நீண்ட நேரம் நின்று வீரர்களை பந்தாடின. இக்காட்சியை திரண்டிருந்த பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.