பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு ஞானப்பால் ஊட்டும் விழா - பால், பன்னீர் உள்ளிட்ட நறுமணமிக்க பொருட்களால் அபிஷேகம்
May 19 2022 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில், திருஞானசம்பந்தர் பெருமானுக்கு ஞானப்பால் ஊட்டும் விழா நடைபெற்றது.
திருஞானசம்பந்தருக்கு வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தின் போது சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியநாயகியம்மன் கோயிலில், திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. சம்பந்தர் பெருமானுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பல்வேறு நறுமணமிக்க பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.