கன்னியாகுமரியில் உள்ள அவ்வையார் அம்மன் கோவிலின் தெப்பக்குளம் : குளத்தை சீரமைக்க தமிழக அரசுக்கு நிர்வாகிகள் கோரிக்கை
May 20 2022 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரியில் உள்ள அவ்வையார் அம்மன் கோவிலின் தெப்பக்குளம், குப்பைகளமாக மாறியுள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீராட முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சங்க காலத்தில் இடம்பெற்ற பெண்பாற்புலவர், அவ்வையார் அம்மனுக்கு இந்தியாவிலே தனி பெரும் கோவில் கன்னியாகுமரி மாவட்டம் சென்பகராமன்புதூர் அருகே அமைந்துள்ளது. 200 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு மாநிலங்களில் இருந்து கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள், ஆடி செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து, அம்மனை வழிபட்டு, குளத்தில் நீராடிச் செல்வது வழக்கம். ஆனால் கோவிலின் தெப்பகுளம், குப்பைகள் நிறைந்த குளமாக மாறியுள்ளதால் வேண்டுதலுக்காக வரும் பக்தர்கள் குளிக்க முடியாமல் வேதனையோடு திரும்பிச் செல்கின்றனர். இதனால் தமிழக அரசு முன் வந்து கோவில் தெப்பகுளத்தை சீரமைத்து தர கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.