மயிலாடுதுறை தருமபுர ஆதீன திருமடத்தில் குருபூஜை விழா - ஆதீனத்தை நாற்காலியில் சுமந்து சென்ற பக்தர்கள்
May 21 2022 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை தருமபுர ஆதீன திருமடத்தில் குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீனம் மடாதிபதியை நாற்காலி பல்லக்கில் பக்தர்கள் சுமந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறையில் பழமையான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் குரு பூஜை விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் ஆதினத்தை, பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, ஞானப்பிரகாசர் குருபூஜை விழா இன்று தொடங்கியது. ஆதின மரபு படி இன்று தருமை ஆதீனம் 27வது குருமுகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் மடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் சுமந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.