திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலய தெப்பத்திருவிழா - பல்லாயிரக்கணக்கான பக்‍தர்கள் பங்கேற்பு

May 21 2022 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தெப்பத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தென்னிந்தியாவிலேயே மிகப்பிரமாண்டமான தெப்பம் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் 3 நாள் தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது. இந்த தெப்ப ​திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள், பொதுமக்கள் திரண்டனர். இந்த தெப்பத்திருவிழா ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் கமலாயத்திருக்குளத்தில் நடைபெறுகிறது. முதலில் ஸ்ரீகல்யாணசுந்தரேசர் சுவாமி எழுந்தருள அங்கு விஷேச தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து குளத்தின் 4 கரைகள் வழியாக தெப்பத்தில் வலம்வந்தபடி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை வரை 3 நாட்கள் நடைபெறும் இத்தெப்பத்திருவிழா நாள்தோறும் தினசரி இரவு 8 மணிக்கு தொடங்கி விடியவிடிய நடைபெறும். மின்னொளியில் மிளிரும் தெப்பத்தின் உள்ளே சுமார் 400 பேர் வரை அமரலாம். தெப்பம் நீரில் மிதந்து வரும் அழகை குளத்தின் 4 கரைகளிலும் அமர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கண்டுகளித்து சுவாமியை வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00