ராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் : வார விடுமுறையை கொண்டாடும் மக்கள் - புனித நீராடி சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
May 22 2022 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் புனித நீராடி வருகின்றனர். இறந்துபோன தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்தனர். இதேபோல் ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும், நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மேலும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதேபோல் தனுஷ்கோடியிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. இதனல் தனுஷ்கோடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.