தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
May 23 2022 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில் தருமபுர ஆதீன பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்ற நிலையில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பல்லக்கை சுமந்து சென்றனர்.
மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ ஆதீன திருமடத்தில், பட்டணப்பிரவேசம் விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஞானபுரீஸ்வரர் ஆலய கொடியேற்றம் திருக்கல்யாணம், தீர்த்தவாரி திருத்தேரோட்டம், முந்தைய ஆதீனங்களின் சித்தி ஸ்தலம் ஆன குருமூர்த்தங்களுக்கு நாற்காலி பல்லக்கில் மடாதிபதி சென்று வழிபாடு செய்தது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தநிலையில் நிறைவு நிகழ்ச்சியாக 11வது நாளில் ஆதீன கர்த்தரை ஞான குருவாக பாவித்து தருமபுர நான்கு ரத வீதிகளில் சிவிகை பல்லக்கில் வீதி உலாவாக தூக்கிச்செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் மடத்து சிப்பந்திகள், மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை வெள்ளிப் பல்லக்கில் அமர்த்தி சுமந்து சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் மடாதிபதி, செங்கோல் ஆதீனம் மடாதிபதி, சூரியனார்கோயில் ஆதீன மடாதிபதி, பல்வேறு மடங்களின் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக, பரதநாட்டியம், இசை கச்சேரி, நாட்டுப்புற இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெற்றன.