கரூர் மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா : ஆயிரக்கணக்கானோர் அக்னி சட்டி எடுத்து வழிபாடு
May 23 2022 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.
கரூர் மாரியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பூச்சொரிதல் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கரூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை, திருமாநிலையூர், படிக்கட்டுதுறை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்து, அக்னி சட்டி எடுத்து வழிபட்டனர்.