பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி - அனைவருக்கும் அருளாசி வழங்குவதாக தருமபுர ஆதீனம் பேட்டி
May 23 2022 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக, தருமபுர ஆதீன மடாதிபதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் பட்டணப்பிரவேச நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் தோளில் சுமந்து செல்ல பொதுமக்களுக்கு அருளாசி வழங்கினார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தருமபுர ஆதீன மடாதிபதி, மரபு நிகழ்ச்சிகளை பேணிக்காக்கும் நோக்கில் பட்டணப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அருளாசி வழங்குவதாகத் தெரிவித்தார்.