மானாமதுரை அருகே பெண்கள் மட்டும் பங்கேற்கும் அம்மன் கோவில் திருவிழா : படையலிடப்பட்ட உணவுகளை உண்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றம்
May 25 2022 3:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மானாமதுரை அருகே பெண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழாவில், திரளானோர் பங்கேற்று அம்மனுக்கு அசைவ உணவு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமையான அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாவில், திரளானோர் பங்கேற்று, அசைவ உணவுகளை சமைத்து அம்மனுக்கு படையல் வைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக பாரம்பரியம் மாறாமல் ஓலைப் பொட்டியில் வைத்து விளக்கேற்றி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பூஜைகள் முடிந்த பின்னர் பெண்கள் தாங்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை உண்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.