திருச்சியில் கல்யாண முருகன் கோயிலில் சாமிசிலையின் கண் திறந்ததாக தகவல் : பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலில் குவிந்ததால் பரபரப்பு
Jun 22 2022 10:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் உள்ள கல்யாண முருகன் திருக்கோயிலில் சாமி சிலையின் கண் திறந்ததாக வெளியான தகவலை அடுத்து, ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
திருச்சி மாவட்டம் வாத்தியார் குளத்தில் கல்யாண முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் 40 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்நிலையில் கோயிலை திறந்து வழக்கம்போல் சாமிக்கு பூஜை செய்தபோது, முருகன் சிலையில் உள்ள கண்கள் திறந்து மூடியது போல் தோன்றியதாக கூறப்படுகிறது. இதனால் பத்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கோயிலில் குவிந்தனர்.