மணப்பாறை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா - ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் பலியிடப்பட்டு நேர்த்திக்கடன்
Jun 30 2022 7:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது.
மணப்பாறையை அடுத்த ஆணையூரில் கரை முனியப்பசாமி கோயில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை காவல் கொடுக்கும் விழா நடைபெறும். கடந்த செவ்வாய்கிழமை காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கிய நிலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மக்கள் நேர்த்திக்கடன் நிறைவேறியதற்காக கொண்டு வந்து விடப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் இரவு தொடங்கி அதிகாலை வரை பலியிடப்பட்டன. இந்த திருவிழாவில் ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் சமையலுக்கு தேவையான அனைத்து பணிகளிலும் ஆண்களே தீவிரமாக ஈடுபட்டனர்.