பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கடந்த 12 நாள் உண்டியல் காணிக்கை ரூ.2.15 கோடி : 947 கிராம் தங்கம், 7933 கிராம் வெள்ளி
Jun 30 2022 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், கடந்த 12 நாள் உண்டியல் காணிக்கையாக, 2 கோடியே 15 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள், கடந்த 12 நாட்களில் நிறைந்ததால், நேற்று, கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், திருக்கோயில் அலுவலர்கள் ஆகியோர், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 12 நாள் காணிக்கையாக 2 கோடியே 15 லட்சத்து 5 ஆயிரத்து 60 ரூபாய் ரொக்கமும், 947 கிராம் தங்கமும், 7 ஆயிரத்து 933 கிராம் வெள்ளியும் பக்தர்கள் செலுத்தி இருந்ததாக, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.