விடுமுறை நாள் என்பதால் திருச்செந்தூரில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள் - கடலிலும் நாழி கிணற்றிலும் புனித நீராடி ஏராளமானோர் தரிசனம்
Jul 24 2022 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிந்து வருவதுடன் அவர்கள் கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். வார விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பல மடங்கு கூடுதலாக பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் இன்று ஆடி மாத ஞாயிறு என்பதாலும் வார விடுமுறை நாள் என்பதாலும் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முன்னதாக பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.