கும்பகோணத்தில் புனித அன்னம்மாள் ஆலயத்தின் 104 ம் ஆண்டு திருவிழா :ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு
Jul 25 2022 8:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் அருகே அமைந்துள்ள புனித அன்னம்மாள் ஆலயத்தின் 104 ம் ஆண்டு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டுக் கருப்பூரில் உள்ள புனித அன்னம்மாள் ஆலயத்தின் 104 ம் ஆண்டு திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் கூட்டு திருப்பலியும் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 8ம் நாள் விழாவான நேற்று இரவு கூட்டுத் திருப்பலியும் வனத்து சின்னப்பரின் அன்னதானமும் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அசைவ உணவும் வழங்கப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு புனித அன்னம்மாள் ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக் பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.