தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலய ஆண்டு திருவிழா : 2 ஆண்டுகளுக்கு பிறகு நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

Jul 25 2022 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலய ஆண்டு திருவிழா, 2 ஆண்டுகளுக்கு பிறகு, நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா ஆலயம், ரோம் நகரின் பசலிகா அந்தஸ்து பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறும் ஆண்டு திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. இந்த திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் கலந்து கொள்வது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, திருவிழா மிக எளிமையாக நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு நாளை காலை பொதுமக்கள் பங்கேற்புடன் இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. நாளை காலை 7 மணிக்கு, முதல் திருப்பலியும், அதனை தொடர்ந்து இரண்டாவது திருப்பலியும் நடைபெற்றபின், கோயிலில் இருந்து கொடி பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்படும். பின்னர், கோவில் எதிரில் உள்ள கொடி மரத்தில், மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில், கொடி ஏற்றி வைக்கப்படும். 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர தேர் பவனி நிகழ்ச்சி ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00