நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா : அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு
Jul 25 2022 7:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி, அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான இன்று, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, காந்திமதி அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. அதன்பின்னர் பெண்களுக்கு வளையல் வழங்கப்பட்டது.