கடலூர்: கோயிலில் நடைபெற்ற ஆடி அமாவாசை விழா - ஏராளமானோர் பங்கேற்பு
Jul 29 2022 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புத்தில் நடைபெற்ற கோயில் விழாவின் கிடா விருந்தோடு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்புத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோயிலின் 22 ஆம் ஆண்டு விழாவும் ஆடி அமாவாசை திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. கருப்பசாமிக்கு மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பத்தர்கள், கருப்புசாமி தரிசனம் செய்து வழிப்ட்டனர். டன் கணக்கில் ஆடு, கோழி இறைச்சிகளும் காய்கறிகளும், கொண்டு உணவு சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. கருப்பசாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் நள்ளிரவில் நீண்ட வரிசையில் காத்திருந்து கிடா விருந்து சாப்பிட்டனர்.