மேலூரில் தாழை கருப்பு கோவில் களரி திருவிழா : 600-க்கும் மேற்பட்டோர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு
Jul 29 2022 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் மேலூரில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த தாழை கருப்பு கோவில் களரி திருவிழா இன்று நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சூரக்குண்டு கிராமத்தில் அமைந்துள்ள தாழை கருப்புசுவாமி கோவில் நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பாரம்பரிய முறைப்படி களரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்றால் ஏழு ஆண்டுகளுக்குப்பின் இந்த களரி திருவிழா நடைபெற்றது. மூன்றாம் வெள்ளிக்கிழமையான இன்று களரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என 600-க்கும் மேற்பட்டோர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைப்பதற்காக தண்ணீர் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பொங்கல் வைப்பு நிகழ்வில் நேர்த்தி கடனாக 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டன.