நிலத்தடி கருப்பசுவாமி கோவிலில் ஆடி அமாவாசை விழா கோலாகலம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
Jul 29 2022 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையையடுத்த மீஞ்சூர் தேவதானம் கிராமத்தில் உள்ள நிலத்தடி கருப்பசுவாமி கோவிலில் ஆடி அமாவாசை விழா கோலாகலமாக நடைபெற்றது.
மீஞ்சூரை அடுத்த தேவதானம் கிராமத்தில் உள்ள நிலத்தடி கருப்பசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை விழா, 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில், முதல் நாளில் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய விழாவின் இரண்டாம் நாளில் மகாயாக பூஜையும், உற்சவர் ஊர்வலமும் நடைபெற்றது. 3-ம் நாளில் கருப்பசுவாமிக்கு அபிஷேக தீபாராதனைகள் நடத்தப்பட்டன. 3 நாட்களும் 3 வேளை அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.