திண்டுக்கல் அருகே, ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கோயில் திருவிழா - 3 ஆயிரம் ஆடுகள் பலியிட்டு விருந்து
Jul 30 2022 2:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கோயில் திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிடப்பட்டு, உணவு பரிமாறப்பட்டது.
வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டியில் கோட்டை கருப்பணசாமி கோவிலில் ஆடி மாதம் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்தத் திருவிழாவின்போது, ஆண்கள் மட்டுமே பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆண்கள், 15 நாள் விரதம் மேற்கொண்டனர். இந்த விரத நாட்களில் தொலைக்காட்சி கூட பார்க்காமல் அவர்கள் வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து, நேர்த்திக் கடன் நிகழ்வில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு உணவு சமைக்கப்பட்டது. திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.