நிறைப்புத்தரிசி பூஜை - சபரிமலை கோவில் நடை நாளைமறுதினம் மாலை திறப்பு
Aug 1 2022 3:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிறைப்புத்தரிசி பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மறுதினம் மாலை திறக்கப்படுகிறது.
சபரிமலை தேவசம்போர்டுக்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட முதல்போக சாகுபடியில் விளைந்த நெற்கதிர்களை சபரிமலையில் வைத்து வழிபடுவது நிறைப்புத்தரிசி பூஜையாகும். அதன்படி நிறைபுத்தரிசி பூஜை வரும் 4-ம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை மறுதினம் மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் ஊர்வலமாக சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு, மறுநாள் அதிகாலை கருவறைக்குள் வைத்து பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.