சபரிமலை அய்யப்பன் கோவிலில் கனமழைக்கு இடையே நடைபெற்ற நிறைபுத்தரிசி பூஜை - பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
Aug 4 2022 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கனமழைக்கு இடையே நிறைபுத்தரிசி பூஜை இன்று காலை நடைபெற்றது.
திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட முதல்போக சாகுபடியில் விளைந்த நெற்கதிர்களை, சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்திற்கு தலையில் சுமந்துவந்து கருவறைக்குள் வைத்து பூஜை செய்வதே நிறைப்புத்தரிசி பூஜையாகும்.
நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று காலை 5.40 மணியளவில் நிறைபுத்தரிசி பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு நெர்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவு செய்த அனைத்து பக்தர்களுக்கும் சபரி மலையில் இன்றைய தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.