ராமநாதபுரம் அருகே அய்யனார் கோவில் முளைப்பாரி ஊர்வலத்தில் உற்சாகம் : இசைக்கு ஏற்ப இளைஞர்களுடன் போட்டிபோட்டு ஆடிய இளம்பெண்கள்
Aug 4 2022 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே அய்யனார் கோவில் முளைப்பாரி ஊர்வலத்தில் இளைஞர்களுக்கு நிகராக ஆர்வத்துடன் ஆடிய இளம்பெண்கள் பார்ப்போரின் கவனத்தை ஈர்த்தனர்.
சாயல்குடி அருகே உள்ள எஸ். வாகைக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வாழவந்தம்மன் ஸ்ரீ நிறைகுளத்து அய்யனார் கோவிலில் வருடாந்திர முளைப்பாரி மற்றும் புரவி எடுப்பு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு வேட்டை அய்யனார் , தவளும் பிள்ளை, கருப்பணசாமி உள்ளிட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சுவாமி சிலைகளை சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அருப்புக்கோட்டை சாலை வழியாக அக்கிராம பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். புரவி எடுப்பு விழா ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் ட்ரம் செட் இசைக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டனர். இதனைக் கண்ட இளம் பெண்கள் ஆர்வத்துடன தாங்களும் இசைக்கு ஏற்ப விசில் அடித்து ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். இளம் பெண்கள் உற்சாகத்துடன் ஆடிய ஆட்டத்தை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மட்டுமின்றி சாலையோரம் நின்ற பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.