பழனி முருகன் கோயிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்ய முன்னுரிமை : கும்பாபிஷேக திருப்பணிகளில் பங்குபெற விருப்பமுள்ளோர் தொடர்புகொள்ள ஏற்பாடு
Aug 9 2022 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்க, அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி தேவஸ்தானம் தலைமை அலுவலகத்தில் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் திரு.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்வது மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேக பணிகளை விரைவுபடுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கும்பாபிஷேக திருப்பணிகளில் பங்குபெற விருப்பமுள்ள பக்தர்கள், கோயில் மின் அஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் அல்லது பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் நேரில் வந்து கடிதம் கொடுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.