பாரம்பரிய முறைப்படி மொஹரம் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள் : மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் தீ மிதித்து வழிபாடு
Aug 9 2022 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் பேரணியாகச் சென்று தொழுகையில் ஈடுபட்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜானி ஜான் கான் சாலையிலிருந்து ஷியா முஸ்லிம்கள் ஏராளமானோர், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஷியா முஸ்லிம் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேரணியாகச் சென்றனர்.
நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கோட்டாட்சியரின் தடையை மீறி பாரம்பரிய முறைப்படி இஸ்லாமியர்கள் மொஹரம் பண்டிகையை கொண்டாடினர். நாகூர் தர்காவின் புதிய நிர்வாகத்தில் இரு தரப்புக்கும் ற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதால், மொஹரம் பண்டிகையை நடத்துவதில் சர்ச்சை எழுந்தது.
தஞ்சையை அடுத்த காசாநாடு புதூர் கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக மொஹரம் பண்டிகை கிராம விழாவாக கொண்டாடப்பட்டது. ஊரின் மையப் பகுதியில் உள்ள அல்லாசாமி கோவிலில் வைத்து பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, ஏராளமானோர் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.