சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் : கேரள அரசு அறிவிப்பு
Aug 10 2022 2:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் என்று கேரள அரசு அறிவித்ததுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மலையாள பிராமணர்கள் மட்டுமே நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை விலக்கப்பட்டுள்ளது. முன்னதாக சபரிமலை கோவில் பிரசாதம், மலையாள பிராமணர்களால் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை தேவசம் போர்டு வெளியிட்ட விளம்பரங்களில் இருந்தது. ஆனால், தற்போது தேவசம் போர்டு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இந்த சாதி நிபந்தனை தவிர்க்கப்பட்டுள்ளது. 2001-ம் ஆண்டிலேயே, விளம்பரங்களில் சாதி சார்ந்த பாகுபாடு காட்டக் கூடாது என்று மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பளித்திருந்தாலும், அது பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், நீண்டகாலமாக நடைமுறையில் இருந்துவந்த பழைய சாதியவாத நடைமுறை சபரிமலையில் நிறுத்தப்பட்டுள்ளது.