திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறவுள்ள ஆவணி திருவிழா - சிறப்பு பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் முடிவு
Aug 11 2022 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழாவிற்காக, சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில், ஆவணி திருவிழா, வரும் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட சுகாதார வசதிகளை ஏற்படுத்தவும், 400 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்றும், ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், 100க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை தமிழகம் முழுவதும் இருந்து இயக்கவும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.