தொடர் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - கடலில் புனித நீராடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்
Aug 15 2022 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொடர் விடுமுறையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
சுதந்திர தின விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கத்தை விட பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மற்ற விடுமுறை நாட்களைவிட இன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.