வேதாரண்யம் அருகே கோயில் திருவிழாவில், குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார்
Aug 16 2022 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோயில் திருவிழாவில், குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார். பக்தர்கள் மீது மஞ்சள் தெளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளி பக்தர்குளம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கி பத்து நாட்களாக நடைபெற்று வந்தது. விழா நாட்களில் பக்தர்கள் வேதாரண்யேஸ்வரர் கோவிலிலிருந்து பால் காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதணை நடைபெற்றது. விழாவின் நிறைவாக அம்மன் அலங்கறிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி நகரில் வீதிஉலா காட்சி நடைபெற்றது தொடர்ந்து அகஸ்தியர் கோவில் அருகில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மஞ்சள் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்