திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

Aug 17 2022 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்று. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி ஆவணி திருவிழா எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டு ஆவணி திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திரளான பக்தர்கள் பங்கேற்புடன் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, முதலில் விஸ்வரூப தரிசனமும், பின்னர் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் கொடி மரத்தில், கொடி ஏற்றி வைக்கப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன. 12 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00