நாகையை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழா - இன்று இரவு நடைபெறுகிறது பெரிய தேர் பவனி
Sep 7 2022 7:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழாவையொட்டி, பெரிய தேர் பவனி இன்று இரவு நடைபெறுகிறது.
நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி இன்று நடைபெறுகிறது. அத்துடன் ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாளான 8-ம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக வேளாங்கன்னியை நோக்கி வருகை தருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராலயத்தின் சார்பிலும் மேற்கொள்ளப்படுகிறது. திருவிழாவையொட்டி வேளாங்கன்னியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.