கும்பகோணம் ஸ்ரீவலம்புரி விநாயகர் ராமநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் : விமரிசையாக நடைபெற்ற 2-ம் கால யாக பூஜை
Sep 8 2022 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீவலம்புரி விநாயகர், ராமநாதசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இரண்டாம் கால யாக பூஜை காலை நடைபெற்றது.
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் உடனாகிய ஸ்ரீராமநாத சுவாமி, ஸ்ரீபத்மாவதி சமேத ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீஅனுக்ரஹ ஆஞ்சநேயர் ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. ராஜகோபுரங்கள் மற்றும் விமானங்கள் முற்றிலும் கருங்கல்லால் செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்றன. யாகசாலை பூஜைக்கு தேவையான மூலிகை பொருட்களை, பக்தர்கள் ஆலயத்தில் இருந்து யாகசாலைக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். இரண்டாம் கால யாக பூஜை காலை தொடங்கி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.