சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் பொன் விழா ஆண்டு திருவிழா கொடியிறக்க நிகழ்ச்சியுடன் நிறைவு
Sep 9 2022 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் பொன் விழா ஆண்டு திருவிழா, கொடியிறக்க நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய பொன் விழா ஆண்டு திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேர் பவனி நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், பொன் விழா ஆண்டு திருவிழா திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் நடந்த கொடியிறக்க நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.